குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் சபா 91 ஆவது வயதில் அமெரிக்காவில் ஒரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் காலமாகியுள்ளார்.
1929 ஆம் ஆண்டில் பிறந்த ஷேக் சபா நவீன குவைத்தின் வெளியுறவுக் கொள்கையின் சிற்பியாக பரவலாகக் கருதப்படுகிறார்.
1963 - 2003 வரையான 40 ஆண்டுகள் குவைத்தின் வெளியுறவு அமைச்சராக ஷேக் சபா பணியாற்றியதுடன், பிரதமர் பதவியையும் வகித்துள்ளார்.
ஜாபிர் அல் -அஹ்மத் அல் சபாவின் மரணத்திற்கு பின்னர் 2006 ஜனவரி மாதம் ஷேக் சபா மன்னராக பொறுப்பேற்றார்.
இந் நிலையில் உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் அறுவை சிகிச்சை செய்த ஷேக் சபா மேலதிக வைத்திய சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
நான்கு அரபு நாடுகளால் கட்டார் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது போன்ற பிராந்திய பிரச்சினைகளை தீர்க்க ஷேக் சபா இராஜதந்திர ரீதியாக அழுத்தம் கொடுத்தார்.
மேலும் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளான ஈராக், சிரியா போன்ற நாடுகளுக்கு உதவ மாநாடுகளை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM