கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் குணமடைவு

Published By: Vishnu

27 Sep, 2020 | 02:10 PM
image

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 3,208 ஆக அதிகரித்துள்ளது.

வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலிருந்து ஏழு பேரும், தேசிய தொற்று நோய் மற்றும் இரனவில வைத்தியசாலைகளிலிருந்து தலா ஐவரும் ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையிலிருந்து நால்வரும், களுபோவில வைத்தியசாலையிலிருந்து ஒருவரும் இவ்வாறு குணமடைந்த நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,349 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 16 வெளிநாட்டினர் உட்பட 128 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே நேரத்தில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 40 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17