வற் வரி விதிப்பின் காரணமாக ஏற்படகூடிய பாதிப்புகளை ஆராய்வதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நியமிக்கப்பட்ட குழுவினது அறிக்கை இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் நான்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி வற் வரி தொடர்பிலான குழுவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமித்திருந்தார். இந்த குழுவில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே இக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.
வற்வரி அதிகரிக்கப்பட்டமையின் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இதன்காரணமாக நாடுபூராகவும் மக்கள் போரட்டங்களில் ஈடுப்பட்டனர். இதன்படி பொது எதிரணியினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிரகாரம் தற்போதைக்கு வற் வரி 15 சதவீத அதிகரிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போதைய 11 சதவீதமே அமுலில் உள்ளது.
இருந்தபோதிலும் வற்வரி தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் இரத்து செல்லுப்படியாகாது. இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி சமர்ப்பிக்கவிருந்த குறித்த சட்டமூலம் சுதந்திரக் கட்சியினரால் பிற்போடப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த விடயத்தில் தேசிய அரசாங்கத்தில் உட்பூசலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வற் வரி விதிப்பின் காரணமாக ஏற்படகூடிய பாதிப்புகளை ஆராய்வதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நியமிக்கப்பட்ட குழுவினது அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM