எதிர்வரும் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினம் வருவதை முன்னிட்டு காலியிலிருந்து யாழ் நோக்கி விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டிப்பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காலியை சேர்ந்த பர்ணாந்து என்ற 73 வயது முதியவரே குறித்த துவிச்சக்கர வண்டிப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதுடன், கடந்த 23 ஆம் திகதி காலியில் ஆரம்பிக்கப்பட்ட பயணம், இன்றையதினம் வவுனியாவை சென்றடைந்தது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த அவரை சமூகசேவைகள் உத்தியோகத்தர் ஶ்ரீனிவாசன் தலைமையில், முதியோர் சங்க பிரதிநிதிகள் வரவேற்றிருந்ததுடன், மாவட்ட அரச அதிபர் சமனபந்துலசேனவுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
தனது உணவு பழக்கவழக்கம் மற்றும், போதைபாவனையற்ற வாழ்க்கை முறையால் தான் ஆரோக்கியமான உடல்நிலையை கொண்டிருப்பதாகவும், இதனாலேயே நீண்ட தூரம் துவிச்சக்கர வண்டிப்பயணத்தை மேற்கொள்ளவும் முடிந்துள்ளது.
ஒருவர் ஆரோக்கியமான நல்ல பழக்கவழக்கங்களை கொண்டிருந்தால் 70 வயதிலும் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று கூறும் அவர், தனது வாழ்க்கையின் அனுபவங்களை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்குடன் குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் சர்வதேச முதியோர் தினம் அன்று ஆரம்பித்த இடமான காலியில் தனது பயணம் முடிவடையவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவரது பயணம் நாளையதினம் யாழ்ப்பாணத்தை நோக்கி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM