மாத்தளை, ரத்தொட்டை ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான போம்ப குமார கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிந்து 2 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மாத்தளை ரத்தொட்டை பகுதியிலுள்ள சந்தேக நபரின் வீட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் அவரின் வீட்டில் நீண்ட நாட்களாக இரகசிய போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM