யாழ். மாவட்டத்தில் நீண்டநாட்களாக துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த திருட்டுக் கும்பல் பொலிசாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களிடம் இருந்து 14 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சபம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பான மாவட்டத்தில் அண்மைக்காலமாக பொது இடங்களில் கைகளில் துவிச்சக்கர வண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.துவிச்சக்கர வண்டிகளை தொலைத்த பலர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் யாழ்ப்பாணம் உரேழு பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மானிப்பாய் சாவற்காட்டு பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.
மூவரிடமும் மேற்கொளப்பட்ட விசாரணைகள் ஊடாக திருடப்பட்டதாக கூறப்படும் 14 துவிச்சக்கர வண்டிகளை பொலிசார் மீட்ட்டதாக தெரிவித்தனர்,
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் மீட்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதர்கான நடவடிக்கைகளை முன்னேடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM