மட்டக்களப்பு வெருகல் அற்றை தோணியில் கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் தோணி கவிழ்ந்ததில் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25) காலையில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்
சேருநுவர பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குழந்தைவேல் கணேசமூர்த்தி என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த முதியவர் வெருகல் ஆற்றுபகுதிக்கு அப்பால் உள்ள தனது காணியில் சேனைபயிர் செய்கை செய்துவருவதாகவும் வழமைபோல சம்பவதினமான இன்று காலை தோணியில் சேனைப்பயிர் செய்கை பகுதிக்கு ஆற்றில் தனிமையில் பயணித்தபோது தோணிகவிழ்ததில் ஆற்றில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இதனையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM