பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
எஸ்.பி.பி.க்கு எக்மோ, இதர கருவிகளுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14 ஆம் திகதி மோசமடைந்தது.
அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் சகஜ நிலைக்கு திரும்பி வந்தார்.
வாய் வழியாகச் சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது. இதனால் திரையுலகினர், ரசிகர்கள் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
மீண்டும் திடீரென்று மோசம் அடைந்துள்ளது.
இந்நிலையில் 51 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை திடீரென்று நேற்று மோசமடைந்ததாகவும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
இது அவரது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM