20 ஆவது திருத்த வரைபிற்கு எதிராக மேலுமோர் மனுத்தாக்கல்

Published By: Vishnu

24 Sep, 2020 | 02:58 PM
image

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி, மேலும் ஒரு மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தின் சில அத்தியாயங்கள், தற்போது நடை முறையில் உள்ள இலங்கையின் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்பதால்,  அதனை நிறைவேற்ற வேண்டுமானால்  பாராளுமன்ற உறுப்பினர்களின் விஷேட பெரும்பான்மைக்கு மேலதிகமாக பொது மக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்படல் வேண்டும் என தீர்ப்பொன்றினை வழங்குமாறு கோரி நேற்று மாலை வரை 6 தரப்புக்கள் உயர் நீதிமன்றில் விஷேட மனுக்களை தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, சட்டத்தரணி இந்திக கால்லகே,  அனில் காரியவசம்,  இலங்கை வெளிப்படைத் தன்மை முன்னணியின் செயலாளர் நாகானந்த கொடித்துவக்கு மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  பாக்கியசோதி சரவணமுத்து  ஆகியோர் நேற்றைய தினம்  இம்மனுக்களை தாக்கல் செய்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58