பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி, மேலும் ஒரு மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முன்னாள் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தின் சில அத்தியாயங்கள், தற்போது நடை முறையில் உள்ள இலங்கையின் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்பதால், அதனை நிறைவேற்ற வேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் விஷேட பெரும்பான்மைக்கு மேலதிகமாக பொது மக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்படல் வேண்டும் என தீர்ப்பொன்றினை வழங்குமாறு கோரி நேற்று மாலை வரை 6 தரப்புக்கள் உயர் நீதிமன்றில் விஷேட மனுக்களை தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, சட்டத்தரணி இந்திக கால்லகே, அனில் காரியவசம், இலங்கை வெளிப்படைத் தன்மை முன்னணியின் செயலாளர் நாகானந்த கொடித்துவக்கு மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் நேற்றைய தினம் இம்மனுக்களை தாக்கல் செய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM