(க.கிஷாந்தன்)
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சப்த கன்னியா என அறியப்படும் ஏழு கன்னியர் மலைக்கு சென்ற நிலையில் காணாமல் போன 5 மாணவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக 5 மாணவர்களும் மலை ஏறச்சென்ற போது, காணாமல் போனதாகவும் அவர்களைத் தேடி பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நேற்றைய தினம் செய்திகள் வெளியாகின.
நேற்று பிற்பகல் 02.00 மணியளவில் ஹட்டன் ரயில் நிலையத்தை வந்தடைந்த இவர்கள் பின்னர் பஸ்ஸில் ஏறி நோட்டன் பிரிட்ஜ் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, முச்சக்கர வண்டி ஒன்றில் சப்த கன்னியா மலையடிவாரத்துக்கு சென்ற அவர்கள் அங்கு மலையேற முற்பட்டுள்ளனர்.
எனினும் பாதி வழியிலேயே சீரற்ற காலநிலை காரணமாக பாதை தெரியாது பாதிக்கப்பட்ட குறித்த மாணவர்கள், பின்னர் இரவானதும், தாம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை அறிந்து, தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறிவித்துள்ளனர்.
வழித்தவறிய மாணவர்களில் ஒருவரின் தொலைபேசியிலிருந்து கிடைத்த குறுஞ்செய்தியை வைத்துக்கொண்டே அவர்களை தேடும் நடவடிக்கைகளில், படையினர் ஈடுப்பட்டதாக அறியமுடிகின்றது.
இதில் 4 பேர் களனி பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், மற்றையவர் கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பிரிவு மாணவன் என்றும் அறியமுடிகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM