அதிக மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு நகரம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார அதிகாரியும் மருத்துவருமான ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 44 இற்கும் அதிகமானோர் மரணித்துள்ளதாகவும் சுட்டிகாட்டினார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக மழையுடனான காலநிலை நிலவுகின்றது. இவ்வாறான நிலையில் கொழும்பு உட்பட நாட்டின் சில மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் தலை தூக்கியுள்ளது.
மறுபுறம் இக்காலப்பகுதியில் தொடர்ந்தும் கொழும்பு நகரத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிந்துள்ளதோடு இவ்வருடத்தின் கடந்த 11 மாதங்களில் நாடளாவிய ரீதியில் டெங்கு தொற்று நோய் காரணமாக 25000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 44 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM