வடக்கின் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு நாமலின் புதிய திட்டம்!

23 Sep, 2020 | 04:53 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

முல்லைத்தீவு,மன்னார் மாவட்ட விளையாட்டு மைதான நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்யவும் வவுனியா,மன்னார்,யாழ் மாவட்ட  விளையாட்டு பாடசாலைகளை  அபிவிருத்தி  செய்யவும்  தேவையான நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கவுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாவின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய  வடக்கிலுள்ள விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பிலான  கேள்விக்கு பதிலளித்த போதே இதனைத்தெரிவித்த  அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ  மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு காணி தெரிவு செய்யப்பட்டு இணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. ஆனால் அந்தக் காணிக்கு  தனியார் உரிமையாளர் ஒருவர் உரிமை கொண்டாடும் நிலையில் நிர்மாணப்பணிகள் தடைப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு  32 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது. இணைப்பு குழு அனுமதி பெறப்பட வுள்ளதோடு 2021 இல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும்.

மன்னார் எமில் நகர பொது விளையாட்டு மைதான பணி தொல்பொருள் பிரச்சினையால் தடைப்பட்டது.அந்தப்பிரச்சினை தீர்ந்துள்ளது.விளையாடக் கூடிய நிலையில் மைதானம் உள்ளதால் அதனை பயன்படுத்த முடியும். 

எதிர்வரும் காலத்தில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வடக்கிலுள்ள விளையாட்டு மைதானங்களுக்கு நிதி ஒதுக்குவது  தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.தேவையான நிதி ஒதுக்கப்படும்.கடந்த காலத்தில் கிளிநொச்சியில் சகல வசதிகளுடன் விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்பட்டது. 

ஆனால் கடந்த காலத்தில் அது பயன்பாடின்றி நாசமடைந்தது.அரசியல் நோக்கில் கட்டிடங்கள் கட்டுவதால் பயனில்லை.தேவையான வசதிகளை நாம் வழங்குவோம்.வவுனியா,மன்னார்,யாழ் மாவட்டங்களில் விளையாட்டு பாடசாலைகளை முன்னேற்றவும் அவற்றுக்கு 200 மீற்றர் ஓடுபாதைகளை நிர்மாணிக்கவும் இருக்கிறோம்.

130 மீற்றர் செயற்கை ஓடுபாதை அமைக்கவும் இருக்கிறோம். மன்னாரில் விளையாட்டு பாடசாலை கிடையாது.கல்வி அமைச்சு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன் பணிகளும் விரைவில்  தொடங்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27