(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
முல்லைத்தீவு,மன்னார் மாவட்ட விளையாட்டு மைதான நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்யவும் வவுனியா,மன்னார்,யாழ் மாவட்ட விளையாட்டு பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவும் தேவையான நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கவுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாவின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய வடக்கிலுள்ள விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பிலான கேள்விக்கு பதிலளித்த போதே இதனைத்தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,
முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு காணி தெரிவு செய்யப்பட்டு இணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. ஆனால் அந்தக் காணிக்கு தனியார் உரிமையாளர் ஒருவர் உரிமை கொண்டாடும் நிலையில் நிர்மாணப்பணிகள் தடைப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு 32 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது. இணைப்பு குழு அனுமதி பெறப்பட வுள்ளதோடு 2021 இல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும்.
மன்னார் எமில் நகர பொது விளையாட்டு மைதான பணி தொல்பொருள் பிரச்சினையால் தடைப்பட்டது.அந்தப்பிரச்சினை தீர்ந்துள்ளது.விளையாடக் கூடிய நிலையில் மைதானம் உள்ளதால் அதனை பயன்படுத்த முடியும்.
எதிர்வரும் காலத்தில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வடக்கிலுள்ள விளையாட்டு மைதானங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.தேவையான நிதி ஒதுக்கப்படும்.கடந்த காலத்தில் கிளிநொச்சியில் சகல வசதிகளுடன் விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்பட்டது.
ஆனால் கடந்த காலத்தில் அது பயன்பாடின்றி நாசமடைந்தது.அரசியல் நோக்கில் கட்டிடங்கள் கட்டுவதால் பயனில்லை.தேவையான வசதிகளை நாம் வழங்குவோம்.வவுனியா,மன்னார்,யாழ் மாவட்டங்களில் விளையாட்டு பாடசாலைகளை முன்னேற்றவும் அவற்றுக்கு 200 மீற்றர் ஓடுபாதைகளை நிர்மாணிக்கவும் இருக்கிறோம்.
130 மீற்றர் செயற்கை ஓடுபாதை அமைக்கவும் இருக்கிறோம். மன்னாரில் விளையாட்டு பாடசாலை கிடையாது.கல்வி அமைச்சு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM