தஸ்மேனியா தீவில் சுமார் 380 திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளது. இது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய இழப்பு என கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை முதல், தஸ்மேனியா தீவின் மேற்கு கடற்கரையில் நூற்றுக்கணக்கான பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கின.
இன்று புதன்கிழமை மீட்புப் படையினரால் 50 திமிங்கிலங்கள் மீட்கப்பட்டது. மீதமுள்ள 30 திமிங்கலங்களுக்கு உதவ அதிகாரிகள் முயன்றனர்.
" திமிங்கலங்கள் உயிருடன் இருக்கும் வரை" மீட்பு பணிகள் தொடரும் என்று தஸ்மேனிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கு காரணம் முழுமையாகப் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 க்குப் பிறகு முதல் தடவையாக தஸ்மேனியாவில் 50 க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் ஒன்றாக கரையொதுங்கி சிக்கித் தவிக்கின்றன.
1996 ஆம் ஆண்டில், மேற்கு அவுஸ்திரேலியாவில் 320 பைலட் திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியது, அதே இனத்தைச் சேர்ந்த 600 திமிங்கிலங்கள் 2017 இல் நியூசிலாந்தின் தென் தீவில் கரையொதுங்கின.
திமிங்கலங்கள் பெரும்பாலும் மேக்வாரி ஹெட்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியைச் சுற்றியுள்ள நீரில் கரையொதுங்குகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM