(செ.தேன்மொழி)
பயாகல - தலுவத்த கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த ஒரு கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுவத்த கடற்கரையோர பகுதியில் செவ்வாய்கிழமை சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதாக பயாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதன்போது நீர் உற்புகாத வகையில் நன்றாக இந்த கொக்கெய்ன் போதைப் பொருள் பொதி செய்யப்பட்டிருந்துள்ளதுடன். அதிலிருந்து ஒரு கிலோ கிராம் கொக்கேன் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கொக்கெய்ன் போதைப் பொருளை இவ்வாறு யார் கடத்தினார்கள் என்பது தொடர்பில் இன்னமும் தகவல்கள் கிடைக்கப் பெறாத நிலையில் , சந்தேக நபர்களை அடையாளம் காணுவதற்காக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM