தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் வலம்வந்த ரூபன், தனது 54 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். அவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார்.
இவர் விஜய்யின் கில்லி, தில், தூள் உள்பட பல படங்களில் நடித்துள்ளதோடு, இரண்டு முகம் உள்பட சில படங்களில் கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
நடிகர் ரூபனுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உறுதியாகிய நிலையில், அவர் திருச்சியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை ரூபனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டமையால், அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் ரூபனின் மறைவு சினிமா துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM