(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பற்றி கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அவரது பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பற்றி தெரிவித்த விடயங்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதியைப் பற்றி ஹேமசிறி பெர்னாண்டோ கூறிய விடயங்கள் உண்மைக்கு புறம்பானவையாகும். இவற்றை அவர் முற்றாக மறுத்துள்ளார். இவை உண்மையான கருத்துக்கள் அல்ல என்பதையும் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
சில வேளைகளில் எதிர்வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் ஹேமசிறி பெர்னாண்டோவினுடைய கருத்துக்களின் உண்மை தன்மையை அதன் போது தெளிவுபடுத்துவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM