நாட்டின் சில பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான்ட்பாஸ்
சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 7 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினும் மற்றையவரிடமிருந்து 5 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. கிரான்ட்பாஸ்- ஸ்டெஸ் வீதியை சேர்ந்த 58 மற்றும் 33 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகொட
மீகொட - தஹம் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 2 கிராம் ஹெரோயின் மற்றும் 150 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் அதே பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்
மாலம்பே
மாலம்பே - 10 ஆம் கட்டைக்கருகில் அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரல்ல - மெகசின் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பொரல்லை - சீவலி குறுக்குத்தெரு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 12 கிராம் ஹெரோயினுடன் பொரல்லை பகுதியைச் சேர்ந்த 39 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM