ஹெரோயின்- கஞ்சாவுடன் ஐவர் கைது

Published By: Digital Desk 3

21 Sep, 2020 | 12:43 PM
image

நாட்டின் சில பகுதிகளில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்ட்பாஸ்

சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 7 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினும் மற்றையவரிடமிருந்து 5 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. கிரான்ட்பாஸ்- ஸ்டெஸ் வீதியை சேர்ந்த 58 மற்றும் 33 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகொட

மீகொட - தஹம் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 2 கிராம் ஹெரோயின் மற்றும் 150 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் அதே பகுதியை  சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்

மாலம்பே 

மாலம்பே - 10 ஆம் கட்டைக்கருகில் அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரல்ல - மெகசின் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பொரல்லை - சீவலி குறுக்குத்தெரு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 12 கிராம் ஹெரோயினுடன் பொரல்லை பகுதியைச் சேர்ந்த 39 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து  வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08