கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை என்பது உலகளாவிய சுகாதார பிரச்சினையாகும், இது உலகளவில் இனப்பெருக்க வயதுடைய மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது.
இந்நிலையில், உலகளாவிய ரீதியில் 48 மில்லியன் தம்பதிகளும் 186 மில்லியன் தனிநபர்களும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருவுறாமை என்பது ஆண் அல்லது பெண் இனப்பெருக்க அமைப்பில் உருவாகும் ஒரு நோயாகும், இது 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தில் இடம்பெறும் வழக்கமான உடலுறவுக்குப் பிறகும் கர்ப்பம் அடையத் தவறுவதை குறிக்கின்றது.
முதன்மை கருவுறாமை என்பது ஒருமுறையேனும் கர்ப்பமடைய இயலாமையாகும். இரண்டாம் நிலை கருவுறாமை என்பது முன்னர் வெற்றிகரமாக கருத்தரித்த பிறகு கர்ப்பம் பெற இயலாமை.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச நோய்களின் வகைப்பாடு பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரிடமும் கருவுறாமைக்கான பல முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காரணங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வழங்குகிறது.
ஆணின் காரணிகள், பெண்ணின் காரணிகள், ஆண் மற்றும் பெண் காரணிகளின் கலவையால் அல்லது விவரிக்கப்படாமல் இருக்கும் காரணிகளால் கருவுறாமை/மலட்டுத்தன்மை ஏற்படலாம்.
இருப்பினும், புகைப்பிடித்தல், அதிகப்படியான மதுபாவனை, உடல் பருமன் அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதல்களின் வெளிப்பாடு போன்ற சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் குறைந்த கருவுறுதல் விகிதங்கள் காரணமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM