(எம்.மனோசித்ரா)
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது பொதுவான நிலைப்பாடாகும்.
எனினும் சுதந்திர கட்சியினால் இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்படுகின்ற குழுவின் அறிக்கைக்கு அமையவே எமது உத்தியோகபூர்வ நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
20 குறித்து ஆராய்வதற்காக சு.க. குழுவொன்றை நியமித்து சுயாதீனமாக ஆராயும் என்று கூறப்பட்ட போதிலும் இதுவரையில் குழு நியமிக்கப்படாமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாரத்தில் 20 தொடர்பில் ஆராயும் குழு நியமிக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். அந்த குழுவினால் முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளுக்கு அமைய சுதந்திர கட்சி அதன் நிலைப்பாட்டை அறிவிக்கும். அதனால் தற்போது விரிவாக எந்த கருத்தையும் எம்மால் கூற முடியாது என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM