(செய்திப்பிரிவு)
வெளியகத் தரப்பினரால் இயக்கப்படும் ஒரு நல்லிணக்கப்பொறிமுறைக்கு ஒருபோதும் உடன்பட முடியாது என்று ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அறிவித்திருக்கிறது.
சுமார் நான்கரை வருடங்களுக்கும் அதிகமான காலமாக உண்மையான நல்லிணக்கத்தை வழங்குவதற்குத் தவறிய - வெளியகத்தரப்பினரால் இயக்கப்படும் ஒரு கட்டமைப்பைத் தொடர்வதிலும் பார்க்க, நாட்டுமக்கள் வழங்கிய ஆணையின் ஆதரவுடன் அவர்களின் நலனை முன்நிறுத்திய வகையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 வது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதம் ஆகிய விடயங்கள் பற்றிய ஐ.நா விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போதே இலங்கையின் பிரதிநிதிகள் மேற்கண்ட நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அத்தோடு 2030 ஆம் ஆண்டுக்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதுடன் உரிமைகள், நீதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
மேலும் ஐ.நா விசேட அறிக்கையாளரின் அறிக்கையைப் பொறுத்தவரையில், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதிலிருந்து உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அடையப்பட்ட நேர்மறையான முன்னேற்றங்கள் அதில் சுட்டிக்காட்டப்படவில்லை என்றும் இலங்கையின் பிரதிநிதிகள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM