மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளபகுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்!

Published By: R. Kalaichelvan

20 Sep, 2020 | 12:49 PM
image

மத்திய மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியான மழையுடன் கூடிய காலநிலையால் மஸ்கெலியா காட்மோர் தனியார் தோட்டத்தின் கல்கந்த பிரிவை சேர்ந்த 44 குடும்பங்களின் சுமார் 180 உறுப்பினர்கள் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதியிலிருந்து தற்காலிகமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர் கே.ஜி.குணதிலக்க தெரிவித்தார்.

அத்துடன் அப்பகுதியில் உள்ள மக்கள் குறிப்பிடுகையில்இஇவ்வாறு கடந்த பல வருடங்களாக எம்மை மழை காலங்களில் தற்காலிக இடங்களுக்கு செல்லுமாறு குறிப்பிடுகின்றனர். ஆனால் எவரும் எமக்கு உரிய தீர்வை பெற்று தருவதாக இல்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இக் குடும்பங்களைச் சேர்ந்த 180 உறுப்பினர்களுக்கு தோட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து அம்பகமுவா பிரதேச செயலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் உலர் உணவு வழங்கப்படும் என்று கிராம சேவகர் கே.ஜி. குணதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38