நாட்டின் சில பகுதிகளில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் உள்நாட்டு, வெளிநாட்டுத் துப்பாக்கிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கோனஹேன விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமை பன்னல - விலகெதற பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்திற்கிடமான ஜீப் வண்டி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது போர 12 வகை உள்நாட்டுத் துப்பாக்கி 1 மற்றும் போர 12 ரக துப்பாக்கி ரவைகள் 17 ஆகியன மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விலகெதற மற்றும் கோனவில பகுதியைச் சேர்ந்த 47 மற்றும் 24 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடுகம - பண்டியஹேன வத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் போர 12 வகை வெளிநாட்டுத் துப்பாக்கிகள் 2 மற்றும் 4 போர 12 ரக துப்பாக்கி ரவைகளுடன் உக்ஓவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதாவக்கபுர குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகம்மன பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பேர 12 வகை உள்நாட்டுத் துப்பாக்கியுடன் மாகம்மமன - தெஹிஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயதான சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM