உலக நாடுகளையே ஆட்டங்காண வைத்துள்ள கொரோனா பாதிப்பால், அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாவே வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன், அந்நாட்டு பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். நாட்டில் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராத சூழலில், தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி எதிர்வரும் 23 ஆம் திகதி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
டெல்லி, மகாராஷ்டிரா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுகிறதாகவும் தெரியவருகிறது. நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி இந்தியாவில் ஒரு நாள், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93 ஆயிரமாக இருந்தது. மொத்த பாதிப்பு 53 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM