ஐந்து மாடிக் கட்டிடம் வீட்டின் மீது இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
இன்று அதிகாலை கண்டி, புவெலிகட பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றே அதன் அருகில் அமைந்துள்ள வீட்டின் மீது சரிந்து வீழ்ந்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீட்டிலிருந்த ஐவர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அதன் பின்னர் மீட்பு பணிகளில் இரு பெண்கள் முன்னதாக மீட்கப்பட்ட நிலையில், மேற்படி குழந்தை சற்று நேரம் தாமதமாக மீட்கப்பட்டது.
அதன் பின்னர் காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
இந் நிலையில் இடிபாட்டுக்குள் சிக்கியுள்ள மேலும் இருவரை மீட்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரும், பொலிஸாரும் மற்றும் மீட்புக் குழுக்களும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM