சீன நிறுவனத்திற்கு சொந்தமான, டிக்டொக் மற்றும் வீ செட் செயலிகளை பதிவிறக்குவதற்கான தடையை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் தடைவிதிக்க அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முறுவல் நிலையை அடுத்து டிரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு சொந்தமான செயலிகள் அமரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாக கூறி அதனை தடை செய்வது குறித்து ஆராய்ந்து வந்தது.
இந்நிலையில், டிக்டொக் மற்றும் வீ செட் செயலிகளுக்கான தடையை ஞாயிற்றுக்கிழமை செயல்படுத்தவுள்ளது.
இதனையடுத்து சீன மொழி பேசுபவர்களிடையே பாரிய பயன்பாட்டைக்கொண்ட வீசெட்டையும் அப்பிள், கூகுள் இயக்கப்படும் ஒன்லைன் சந்தைகளிலிருந்து டிக்டொக்கையும் தடை செய்யவுள்ளது.
அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை முதல் வீசெட் தடைசெய்யப்படும் அதேவேளை, தற்போது டிக்டொக்கை பயன்படுத்தும் பயனர்களால் நவம்பர் 12 ஆம் திகதி வரை பயன்படுத்த முடியும்.
ஆனால் அதற்கு முன்னர் டிக்டொக் குறித்த தேசிய பாதுகாப்பு சந்தேகங்கள் தீர்க்கப்பட்டால், உத்தரவு நீக்கப்படலாம் என்று வர்த்தகத் துறையினல் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM