20 ஆவது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை, மக்கள் போராட்டம் - ரஞ்சித் மத்துமபண்டார

Published By: Digital Desk 3

18 Sep, 2020 | 03:51 PM
image

(செ.தேன்மொழி)

சர்வாதிகார ஆட்சிக்கு முதலிடம் கொடுத்து கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்றும் , அவ்வாறு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளையும் , மக்கள் போராட்டங்களையும் மேற்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

அரசியலமைப்பின் 20 ஆதாவது திருத்தம் தொடர்பில் மீளாய்வு செய்வதாக அரசாங்கம் தெரிவித்தாலும். ஆரம்பத்தில் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதேவேளை சர்வாதிகார ஆட்சி மற்றும் அரச சொத்துக்களை கொள்ளையிடுவதற்கான வசதிகளை கொண்டே 20 ஆவது திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் காலங்களில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும். அதன்காரணமாகவே திருத்தம் தொடர்பில் தற்போது ஆளும் தரப்பினர் மத்தியிலேயே எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை ஜனாதிபதியின் கையில் அனைத்து அதிகாரங்களையும் வழங்கி , 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் செய்த தவறுகளை மீண்டும் செய்யப் போகின்றார்களா? 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீளாய்வு செய்வதற்காக பிரதமர் குழுவொன்றை நியமித்திருந்த போதும் அந்த குழுவின் அறிக்கை அமைச்சரவையில் கூட சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே பிரதமருக்கு இந்த நிலைமை என்றால், திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அவருடைய நிலைமை எவ்வாறு இருக்கும்?

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தவர்களே, இன்று தனிநபர் ஒருவருக்கு அதிகூடிய அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிப்பதற்கான காரணம் என்ன? திருத்தம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை , பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதிலும் சிக்கல் ஏற்படும். சிலவேளை 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்வோம்.  மேலும் இந்த திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களையும் மேற்கொள்வோம்.

19 ஆவது அரசியலமைப்பில் காணப்பட்ட குறைப்பாட்டின் காரணமாகவே , ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் , தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் அரசாங்கம் காண்பித்து வருகின்றது. ஆனால் அது அவ்வாறு இல்லை. நாடு எதிர் நோக்க வேண்டி ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு அரசியலமைப்பு திருத்தங்கள் ஒரு போதும் காரணம் கிடையாது. அதற்கு ஆட்சியாளர்களே பொறுப்புக் கூறவேண்டும். 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்ற ஒருவரை ஜனாதிபதியாக தெரிவுச் செய்தமையே நாங்கள் செய்த மிகப் பெரிய தவறாகும்.

கேள்வி : மாகாணசபை தேர்தல் தொடர்பில் ஆளும் தரப்பினர் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் தொடர்ந்தும் மாகாணசபைகள் காணப்பட வேண்டும் என்று தெரிவித்தாலும் உங்களது ஆட்சியின் போது ஏன் தேர்தலை நடத்தவில்லை?

பதில்: நாட்டு மக்களுக்கிடையிலான பிரிவினவாத எண்ணங்களை நீக்கும் நோக்கத்திலே மாகாணசபைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அது தொடர்ந்தும் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எண்ணம். மாகாணசபை தேர்தலை கடந்த வருடமே நடத்தியிருக்க வேண்டும். அதனை உரிய நேரத்தில் நடத்த தவறியமை நாங்கள் விட்ட பிழையே.  தற்போது அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப்  பெற்றுள்ளதால் மகாணசபைகள் தொடர்பில் உரிய தீர்மானத்தை எடுத்து செயற்படலாம் அல்லவா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27