மூக்கு வடிதனால் மட்டுமே பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சளி இரண்டையும் எண்ணி குழப்பமடைய வேண்டாம் என லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கு மூக்கு வடியும் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை, அதற்கு பதிலாக சளி தொல்லை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குழந்தைகளுக்கு சோர்வு மிகவும் பொதுவான அறிகுறி எனவும் என்று குறித்த நிபுணர் தெரிவித்துள்ளார்.
லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர், கொரோனா வைரஸ் அறிகுறி குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் படி பாடசாலை பருவ குழந்தைகளுக்கு கொவிட் -19 இன் பொதுவான அறிகுறிகளாக சோர்வு (55 சதவீதம்), தலைவலி (55 சதவீதம்) மற்றும் காய்ச்சல் (49 சதவீதம்) வெளிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் பொதுவான அறிகுறிகளாக சோர்வு (87 சதவீதம்), தலைவலி (72 சதவீதம்) மற்றும் வாசனை இழப்பு (60 சதவீதம்) காணப்படுவதாக அவரின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
இவ் ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மூக்கு வடிதல் பற்றி பெரும்பாலானோர் தெரிவிக்கவில்லை, இதன் அடிப்படையில் மூக்கு வடியும் அறிகுறி மட்டும் உள்ள சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர் அச்சம் கொள்ள தேவையில்லை என பேராசிரியர் டிம் ஸ்பெக்டர், கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM