(செ.தேன்மொழி)
நாடளாவிய ரீதியில் கடந்த 17 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 29 ஆயிரத்து 171 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய கடந்த முதலாம் ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் இன்று வியாழக்கிழமை வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத ஆயுதங்கள் , போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும், பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 8358 சந்தேக நபர்களுள் 4712 சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 27 கிலோ 893 கிராம் 321 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா போதைப் பொருளுடன் 3438 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 401 கிலோ 739 கிராம் 415 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடனும் 208 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 370 கிராம் 483 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 570 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 63 ஆயிரத்து 738 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்தமை தொடர்பில் 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,ஆயுதங்கள் வைத்திருந்ததாக 113 பேரும் , வெடிமருந்துகளை வைத்திருந்ததாக 08 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 32 குழல் 12 ரக துப்பாக்கிகளும் , 93 உள்நாட்டு துப்பாக்கிகளும் , 3 ரி 56 ரக துப்பாக்கிகளும் ,4 ரிவோல்டர் ரக துப்பாக்கிகள் , 6 கல்கட்டஸ் துப்பாக்கிகளும் , கைத்துப்பாக்கி ஒன்றும் 237 துப்பாக்கி தோட்டாக்களும் மற்றும் 7 வாள்களும் , 3 கத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை 18 கிராம் தொகை வெடி மருந்து , 25 டெட்டனேட்டர்கள் மற்றும் 12 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 6678 சந்தேக நபர்களும், வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்ததாக 13444 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதன் நோக்கத்திலே பொலிஸார் இந்த விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM