சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல் , விநியோகிக்கும் பொறுப்பு இராணுவத்திடம்

Published By: Digital Desk 4

16 Sep, 2020 | 04:34 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய வாகன அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணிகளை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது. 

தலைமை சமிஞ்ஞை அதிகாரி, தகவல் தொழிநுட்ப பணிப்பாளர் மற்றும் ஏனைய தொழிநுட்ப அதிகாரிகளுடன்  இராணுவத்தளபதி சவேந்திர சில்வா சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடல் மற்றும் விநியோகித்தல் தொடர்பில் செவ்வாய்கிழமை விஷேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்துள்ளார்.

தற்போது சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் தனியார் நிறுவனத்திடமிருந்து இராணுவத்தினரிடம் அதனை பொறுப்பளிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை முதலாம் திகதி அமைச்சரவையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்துக்கமைய 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேஜர் ஜெனரல் அதீப திலகரத்ன, பிரிகேடியர் அஷோக பீரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்