இந்தியாவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்ட விமானத்தில் போதை பொருள் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்துக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் சிவகங்கை மாவட்டம் இளையான் குடியை சேர்ந்த சிக்கந்தர் அலி (40) என்ற இளைஞரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது பயணப்பையில் 4 கிலோ போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்த முயன்றவேளையில் சிக்கந்தர் அலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னை ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பரின் மூலம் குறித்த போதைப்பொருள் கொள்வனவு செய்யப்பட்டமை தெரிய வந்ததுள்ளது.
இந்நிலையில்,சாதிக் பாட்ஷா வீட்டில் மேற்க்கொண்ட சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு இலங்கை ரூபாயில் 2 .5 கோடியாகும்.
பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM