ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உயிரைக்காப்பாற்றியது நானே என நாமல்குமார தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை கொலைசெய்யும் திட்டத்தில் இருந்து அவரை தானே காப்பாற்றியதாக சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை வெளியிட்ட நாமல் குமார மேலும் தெரிவித்துள்ளார்.
அன்றையதினம் தான் வெளியிட்ட தகவல்கள் காரணமாக தற்போது கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதாகவும் இது சம்பந்தமாக தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரச பாதுகாப்பு மிகவும் பலவீனமாக இருந்தது எனவும் இதன் காரணமாகவே ஜனாதிபதியை கொலைசெய்யும் சதித்திட்டத்தைக்கூட தன்னால் வெளியிட முடிந்தது எனவும் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியும்.
ஆனாலும் மிக முக்கிய தகவலை வெளியிட்ட தனக்கு இதுவரை பாதுகாப்பு கிடைக்கவில்லை எனவும் இலங்கையின் சட்டத்தில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் எனவும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM