தனது தேவைக்காகவே ரணில் 19 ஐ உருவாக்கினார்: நிமல் லன்சா

Published By: J.G.Stephan

15 Sep, 2020 | 03:22 PM
image

(செ.தேன்மொழி)
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாட்டுக்கு பயனை பெற்றுக் கொடுப்பதற்காக அன்றி , முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா குற்றஞ்சாட்டியுள்ளார்.                

நீர்கொழும்பு நகரசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் நாட்டுக்கு பயன்தரும் எந்த விடயங்களும் இல்லை. உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களின் பின்னர் பொலிஸ் மா அதிபரை பதவி விலக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனநாயக நாடொன்றில் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்ற நிலைமை காணப்பட்டாலும் ,சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியும் , பிரதமரும் இரு பாதையில் பயணித்தனர். அதனால் நாடு பின்னடைவையே சந்தித்திருந்தது. அதனால் தான் மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்துள்ளனர். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதியாக வரமுடியாது என்பதன் காரணமாகவே , 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து , பிரதமருக்கான அதிகாரங்களை அதிகரித்துள்ளனர்.  இதவேளை ராஜபக்ஷர்களை அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலக்கும் எண்ணமும் இந்த திருத்தத்தில் மேலோங்கி காணப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தினால் கொடுவரப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபானது நாட்டுக்கு நன்மை பயக்கும் திருத்தமொன்றாகவே உருவாக்கப்படவுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ திருத்தத்தை மீளாய்வு செய்வதற்கு தகுதியான நபர்களையே நியமித்துள்ளார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44