இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் முகக்கவசம் அணிய மறுப்பவர்களுக்கு தண்டனையாக கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய புதைகுழிகளை தோண்டுவதற்கு இந்நாட்டு அரசினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிழக்கு ஜாவாவில் உள்ள பாண்டோக் ரங்கோன் எனப்படும் பொது மையானத்தில் இதுவரை எட்டு பேருக்கு இவ்வாறு தண்டனை விடுவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுபாடுகளை மீறியதற்காக 'கொரோனா தடுப்பு' என தெரிவித்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தண்டிக்கப்படுபவர்கள் ஒவ்வொரு கல்லறையையும் தோண்டுவதற்கு நியமிக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, இந்தோனேசியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று 3,141 ஆக பதிவாகியதையடுத்து மொத்தம் எண்ணிக்கை 221,523 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இங்கு 8,841பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM