'உணவுப் பொருட்களில் தன்னிறைவு காண வடக்கில் இருந்து விவசாயப் புரட்சி ஆரம்பம்': மஹிந்தானந்த

Published By: J.G.Stephan

13 Sep, 2020 | 03:50 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)
உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களை இங்கு உற்பத்தி செய்து அவற்றில் தன்னிறைவு காணும் விவசாய புரட்சியொன்றை வடக்கில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கைலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாளை மறுதினம் 15 ஆம் திகதி விவசாய அமைச்சர் என்றவகையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ள இருக்கின்றேன். வடக்கிலுள்ள 400 விவசாய, அமைப்புகளை சந்தித்து தேவையான ஊக்குவிப்புகளையும் உதவிகளையும் வழங்கி விவசாயத்துறையில் தன்னிறைவு காண திட்டம் தயாரித்துள்ளேன். இதனுடன் இணைந்ததாக வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள், அங்கவீனமுற்றோர், புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்கள் போன்றோருக்கு சுயதொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க திட்டமிட்டிருக்கின்றோம்.

ஆரம்ப காலத்தில் கிழங்கு, வெங்காயம், மிளகாய், பால் உற்பத்திகளில் வடபகுதி முன்னணியில் இருந்தது. யுத்தத்தின் பின்னர் பின்னடைவு ஏற்பட்டது. இன்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அநேக உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்து விவசாய புரட்சியொன்றை ஏற்படுத்த பிரதமர் எனக்கு  ஆலோசனை வழங்கியுள்ளார். இதனை வடக்கில் இருந்து ஆரம்பிக்குமாறும் அவர் கோரினார். இதற்கமையவே நாளை மறுதினம்  வடக்கில் ஆரம்பிக்கப்படுகிறது.

அங்குள்ள விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க தேவையான உதவிகளை வழங்கவும் இருக்கிறோம். பால் உற்பத்திகளும் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறன. உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்தவும் விசேட திட்டம் முன்னெடுக்கப்படும்.

இதனைத்தொடர்ந்து ஏனைய பிரதேசங்களிலும் இந்த விவசாய புரட்சி முன்னெடுக்கப்படும். எதிர்வரும் 3 வருட காலத்தினுள் பல உணவுப் பொருட்களில் தன்னிறைவு காண திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01