(எம்.ஆர்.எம்.வஸீம்)
உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களை இங்கு உற்பத்தி செய்து அவற்றில் தன்னிறைவு காணும் விவசாய புரட்சியொன்றை வடக்கில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கைலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாளை மறுதினம் 15 ஆம் திகதி விவசாய அமைச்சர் என்றவகையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ள இருக்கின்றேன். வடக்கிலுள்ள 400 விவசாய, அமைப்புகளை சந்தித்து தேவையான ஊக்குவிப்புகளையும் உதவிகளையும் வழங்கி விவசாயத்துறையில் தன்னிறைவு காண திட்டம் தயாரித்துள்ளேன். இதனுடன் இணைந்ததாக வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள், அங்கவீனமுற்றோர், புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்கள் போன்றோருக்கு சுயதொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க திட்டமிட்டிருக்கின்றோம்.
ஆரம்ப காலத்தில் கிழங்கு, வெங்காயம், மிளகாய், பால் உற்பத்திகளில் வடபகுதி முன்னணியில் இருந்தது. யுத்தத்தின் பின்னர் பின்னடைவு ஏற்பட்டது. இன்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அநேக உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்து விவசாய புரட்சியொன்றை ஏற்படுத்த பிரதமர் எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனை வடக்கில் இருந்து ஆரம்பிக்குமாறும் அவர் கோரினார். இதற்கமையவே நாளை மறுதினம் வடக்கில் ஆரம்பிக்கப்படுகிறது.
அங்குள்ள விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க தேவையான உதவிகளை வழங்கவும் இருக்கிறோம். பால் உற்பத்திகளும் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறன. உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்தவும் விசேட திட்டம் முன்னெடுக்கப்படும்.
இதனைத்தொடர்ந்து ஏனைய பிரதேசங்களிலும் இந்த விவசாய புரட்சி முன்னெடுக்கப்படும். எதிர்வரும் 3 வருட காலத்தினுள் பல உணவுப் பொருட்களில் தன்னிறைவு காண திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM