ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவுக்கு மேற்கே கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் (124 மைல்) தொலைவில் உள்ள கமிட்டுகா நகரில் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இதனால் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டிய தெற்கு கிவு மாகாணத்தின் ஆளுனர் தியோ காசி, அவர்களின் விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.
எனினும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் மீட்பு நடவடிக்கையும் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெய்த கனமழையால் தங்கச் சுரங்கத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள என்ஜாலி நதியின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM