(ஆர்.ராம்)
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரை செய்வதற்காக நாளை திங்கட்கிழமை 14 ஆம் திகதி செயற்குழு கூடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இக்கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் காலை 9மணிக்கு கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை தொடர்பிலும் தீர்க்கமான தீர்மானம் ஒன்றை நோக்கி விவாதிக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட எண்மரில் ஒருவரை பிரதி தலைவர் பதவிக்காக தெரிவு செய்யவுள்ளதாகவும் பிரதி தலைவரின் பதவிக்காக வேறு சிலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் வாக்கெடுப்பின் மூலம் பிரதி தலைவர் செய்யப்படுவார் எனவும் கட்சியின் உயர் மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவராகவுமுள்ள சஜித் பிரேமதாசஸ விலகியமையை தொடர்ந்து அப்பதவிக்கான வெற்றிடம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM