யாழில் ஹெரோயினுடன் பெண் கைது!

Published By: R. Kalaichelvan

12 Sep, 2020 | 12:34 PM
image

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் உடைமையில் வைத்திருந்த பெண்ணொருவர் இளவாலைப் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுழிபுரம் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் போதைப் பொருள் இருப்பதாக இளவாலை பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இளவாலைப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது குறித்த வீட்டில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு 36 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 2 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49