(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டை துண்டாக பிரிக்கும் சமஷ்டி முறையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஒற்றையாட்சியை ஏற்படுத்தவே இராணுவத்தினர் உயிரை தியாகம் செய்து போராடினர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
தாய்நாடு எமது என்ற அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் செயலையே மேற்கொண்டு வருகின்றது. நாட்டில் ஒற்றையாட்சி இடம்பெறவேண்டும் என்பதற்காகவே இராணுவத்தினர் 30 வருடகாலம் போராடி யுத்தத்தை வெற்றிகொண்டனர்.
ஆனால் அரசாங்கம் சமஷ்டி முறையை கொண்டுவந்து தோட்டத்தொழிலாளர்களுக்கு மலையகத்தையும், வடக்கை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும். கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி அலகு அமைப்பதற்கும் ஏற்றவாறு நாட்டை துண்டாட முயற்சிக்கின்றது இதனை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM