இலங்கையில் இடைக்கால நீதிப்பொறிமுறைக்கு செயற்பாட்டைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் தரப்பில் அர்ப்பணிப்பு இல்லாததைத் தவிர அதனை முன்னெடுப்பதில் வேறெந்தத் தடைகளும் இல்லை என்று உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் உத்தரவாதம் ஆகியவற்றை மேம்படுத்துதல் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப் தெரிவித்திருக்கிறார்.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் உத்தரவாதம் ஆகியவற்றை மேம்படுத்துதல் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப்பின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், இலங்கையில் இடைக்கால நீதிப்பொறிமுறைக்கு செயற்பாட்டைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் தரப்பில் அர்ப்பணிப்பு இல்லாததைத் தவிர வேறெந்தத் தடைகளும் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
'இடைக்கால நீதிப்பொறிமுறையைத் திட்டமிடுவதிலும் செயற்படுத்துவதிலும் இலங்கை அரசாங்கம் மிகவும் மெத்தனமாக இருப்பது மாத்திரமன்றி, அதன் நடைமுறைகளுக்கான முழுமையான உரித்துடைமையை பொறுப்பேற்பதற்கும் தவறியிருக்கிறது' என்றும் ஐ.நா விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்..
உண்மைகளைக் கண்டறிதல், நீதிவழங்கல், இழப்பீடு வழங்கல், உத்தரவாதமளித்தல் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் அடைந்துகொண்டிருக்கும் முன்னேற்றங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மிகப் பாரிய வன்முறைகளுக்கு நிவாரணமளிக்கக்கூடிய முறைகள் குறித்து அரசாங்கத்திற்கும் இலங்கைச்சமூகத்திற்கும் ஆலோசனைகளை வழங்கல் ஆகிய நோக்கங்களுக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 10 - 23 ஆம் திகதிவரை அரசாங்கத்தின் அழைப்பையேற்று, ஐ.நா விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப் இலங்கைக்கு வருகைதந்திருந்தார்.
மனித உரிமைகள் விவகாரத்தில் பகுதியளவு இணக்கப்பாடுடைய வரலாற்றையே இலங்கை கொண்டிருக்கிறது. எனினும் உண்மையில் அது முற்றிலும் இணக்கப்பாடற்ற ஒரு நிலையேயாகும்.
அதேவேளை இடைக்கால நீதிப்பொறிமுறை பற்றி விவாதிக்கும் போது, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரினால் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டது போன்று பேசப்படுகின்றது.
அவ்வாறு செய்வது போரினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையும் ஏனைய சமூகத்தவரையும் புறக்கணிப்பதாகவே அமையும் என்றும் பாப்லோ டி கிறீப் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM