சட்ட விரோதமாக இறைச்சி வேட்டடையாடிய ஐவர் நேற்று பிற்பகல் உஹண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லாத்துகல - நுவரகல வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்ட விரோதமாக இறைச்சிகளை வேட்டையாடிய சந்தேகநபர்கள் ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து வேட்டையாடப் பயன்படுத்திய உள்நாட்டு துப்பாக்கி 1 மற்றும் வேட்டையாடிய 5 கிலோ 310 கிராம் இறைச்சி ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இவ்வாறு எந்த விலங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளன என்பது தொடர்பில் அம்பாறை வனஜீவ ராசி திணைக்கள அதிகாரிகள் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளனர். உஹண பகுதியைச் சேர்ந்த 32, 34, 35, 38 மற்றும் 44 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM