இரு குழுக்கள் இடையே மோதல் : ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்

Published By: MD.Lucias

14 Jul, 2016 | 05:00 PM
image

நுவரெலியா,  ஹங்குராங்கெத்த பிரதேச பிரிவிற்குட்பட்ட லூல்கந்துர அப்பர் கோனாவ தோட்டத்தில் இரு குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

மேற்படி தோட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் இரு குடும்பங்களுக்கிடையில்  வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்பு மோதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இரு குழுக்கள் இடையே கூரிய ஆயுதங்களால் தாக்குதலும மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விடயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த அய்யாக்கண்ணு (வயது 54)  என்பவரை  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார். 

 இச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில்  இருவர் ரிகில்ல கஸ்கட வைத்தியசாலையிலும் மேலும் நால்வர் கண்டி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக ஹெங்குரங்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41