கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட அறுவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிபன்ன
வெலிபன்ன - பொன்துபிட்டிய சந்திக்கருகில் ஹொரண விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 22 கிராம் ஹெரோயினுடன் குருந்து வீதி - பொன்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த 39 வயதான சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம
வெலிகம பொலிஸ் பிரிவு தெனிப்பிட்டிய பகுதியில் இராஜகிரிய விசேட அதிரடி படை முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 2 கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயினுடன் 35 வயதான பாதாள குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பகுதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இப்பாவல பகுதியில் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் மிதிகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய
திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய வெல்லம்பிட்டிய - வென்னவத்த , ரணகுர மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 100 கிராம் 983 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண்னொருவர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 42 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
களனி
பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பியகம வீதி - களனி பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில் 2 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயினுடன் களனி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட கைதுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM