வவுனியா குருமன்காடு பகுதியில் நேற்று மாலை போக்குவரத்து பொலிசார் வாகனச்சாரதிகளுக்கு எதிராக மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது போக்குவரத்து வீதி வழிமுறைகளை பின்பற்றத்தவறிய 28 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக நேற்று மாலை குருமன்காடு சந்தியில் போக்குவரத்து பொலிசார் வீதி வழிமுறைகளை மீறி மோட்டார் வாகனம் செலுத்திய 28 பேருக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது . தலைக்கவசம் இன்றி , கைத் தொலைபேசி பாவித்தல் , காப்புறுதி ஆணவம் இன்றி , மோட்டார் அனுமதிப்பத்திரம் இன்றி , மதுபோதையில் எனப்பல்வேறு விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 28 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதில் நான்கு பேருக்கு எதிராக நீதிமன்ற வழக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 24 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார் .
இதேவேளை இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து நகரில் முன்னெடுக்கப்படும் எனவே பொது மக்கள் சாரதிகள் போக்குவரத்துப் பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM