கம்பளை உலப்பனை மாவில தோட்ட தொழிலாளர்கள் காலம் காலமாக இதே தோட்டத்தில் தொழில் செய்து வருகிறார்கள் ஆனால் இவர்களுக்கு வீடமைப்பதற்கு கூட ஒரு காணியை தோட்ட நிர்வாகம் வழங்கவில்லை. இதே சமயத்தில் இதே தோட்டத்தில் சேவை புரியும் சேவையாளர்களுக்கு நிர்வாகம் தோட்டக் காணியை திட்டமிட்டு பிரித்துக் கொடுக்க எடுத்த முயற்சியினால் நிர்வாகத்துக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது .
இவ்விடயம் தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான மேற்குறித்த மாவில தோட்டத்தில் காலம் காலமாக உழைத்து வரும் அவர்களுக்கு ஒரு அங்குல காணியெனும் இதுவரைக்கும் நிர்வாகம் வழங்கவில்லை.
இது தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நேற்று அத் தோட்ட தொழிலாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இதற்கான காத்திரமான தீர்வை அடையும் பொருட்டு பெருந்தோட்ட துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன அவர்களின் கவனத்திற்கு கொன்டுச்சென்றதையடுத்து நேரடியாக மாவில தோட்ட மக்களையும் சம்மந்தபட்ட தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையாடி தோட்ட சேவையாளர்களுக்கு வழங்கயிருந்த காணியை அமைச்சரின் தலையீட்டால் உடனடியாக இடை நிறுத்தப்பட்டது.
இச் சந்திப்பின் போது இ.தொ.காவின் உப தலைவர் துறை மதியூகராஜா, சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளரும் உதவிசெயலாளருமான பரத் அருள்சாமி ஆகியோருடன் பெரும்திரளான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM