(செய்திப்பிரிவு)
நாட்டில் பல பகுதிகளிலும் நேற்று புதன்கிழமை பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது உள்நாட்டு , வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவிசாவளை
சீதாவக்கபுர குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டதெனிய - தெஹியோவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் தெஹியோவிட்ட - பிட்டதெனிய பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 67 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்படும் போர 12 மற்றும் போர 16 ரக துப்பாக்கிகள் 2 கைப்பற்றப்பட்டுள்ளன.
யக்கலமுல்ல
யக்கலமுல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய தெஹிகஹஹேன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது தெஹிகஹஹேன பகுதியைச் சேர்ந்த 41 வயதான சந்தேகநபரொருவர் போர 12 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது டய்கர் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் துப்பாக்கியுடன் மாகெதற பகுதியைச் சேர்ந்த 44 வயதான மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திக்வெல்ல
திக்வெல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களோடு சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து போர 12 ரக துப்பாக்கி , நாட்டு துப்பாக்கிகள் இரண்டு , போர 12 ரக துப்பாக்கி ரவைகள் 27, டி 56 ரக துப்பாக்கி ரவைகள் 5, சட்ட விரோத கத்தியொன்று மற்றும் வாள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. போரகன்த மற்றும் ஊருகமுவ பகுதியைச் சேர்ந்த 19, 33 மற்றும் 62 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குறித்த கைதுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM