கல்முனை மாநகர சபையினால் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் தினமும் கொட்டப்படும் திண்மக்கழிவுகளினால் தொடர்மாடி குடியிருப்பில் வாழும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை உண்பதற்காகவே அன்றாடம் சுமார் 35 க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டமாக குடியிருப்புகளுக்குள் வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை(8) இரவு சுமார் 15 யானைகள் குறித்த குடியிருப்புக்குள் உட்புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. கல்முனை மாநகர சபையினால் அங்கு கொட்டப்படுகின்ற குப்பை கூழங்கள்களை உண்பதற்காக பகல் வேளைகளிலும் இரவு நேரங்களிலும் யானைக்கூட்டம் தொடர்ந்தும் படையெடுத்து வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது இரவு நேரங்களில் அந்த யானைக் கூட்டங்கள் தொடர்மாடி குடியிருப்புக்குள் ஊடுருவதால் மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருவதுடன் இரவு நேரங்களிலும் அதிகாலைப் பொழுதிலும் மீனவர்கள் தம் தொழிலுக்கு செல்வதில் சிரமப்படவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மக்கள் கேட்டுக்கெண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM