மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சீனாவிலிருந்து நுழைவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான மே 29 ஜனாதிபதி பிரகடனத்தின் கீழ் 1,000 க்கும் மேற்பட்ட சீன நாட்டினருக்கான விசாக்களை அமெரிக்கா இரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செயல் தலைவர் சாட் வுல்ஃப், சில சீன பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சீனாவின் இராணுவ இணைவு மூலோபாயத்துடன் தொடர்புள்ளவர்கள், அவர்கள் திருடுவதைத் தடுப்பதற்கும், முக்கியமான ஆராய்ச்சி தகவலை பெறுவதையும் தடுக்கும் வகையிலேயே இவ்வாறு விசாக்களை இரத்து செய்துள்ளதாக கூறினார்.
கொரோனா வைரஸ் ஆராய்ச்சியைத் திருடுவதற்கான முயற்சிகள் உட்பட, சீனாவின் அநியாய வணிக நடைமுறைகள் மற்றும் தொழில்துறை உளவு பற்றிய அமெரிக்க குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறினார்.
மேலும் அமெரிக்க கல்வியாளர்களை சுரண்டுவதற்காக மாணவர் விசாக்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதேவேளை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹொங்காங்கில் திணிக்கும் சீனாவின் திட்டங்களுக்கு அமெரிக்கா அளித்த பதிலின் ஒரு பகுதியாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மே 29 அன்று வெளியிட்ட பிரகடனத்தின் கீழ் விசா நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM