(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
மலையகத்தைச் சேர்ந்த 3 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களையும் ஆசிரியர் நியமனங்களில் உள்வாங்குவதுடன் 150 வருடங்களுக்கு மேலாகப் பெருந்தோட்டதுறையில் ஈடுபட்டு வரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே பெருந்தோட்டத்துறை நாட்டின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. ஆனாலும் நாட்டில் உருவான ஒவ்வொரு அரசாங்கங்களும் பெருந்தோட்டத்துறை தொடர்பில் உரிய கவனம் செலுத்தவில்லை. இதனால் இத்துறை தொடர்ச்சியாகப் பாதிப்படைந்து வருகிறது. இது நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெருந்தோட்டதுறையை வளப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் 3 ஆயிரம் பேரைக்கொண்டு, மலையகத் தோட்டப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும். இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தத் தொழில் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் ஆசிரியர் நியமனங்களுக்குள் உள்வாங்கப்படவில்லை. இவர்களுக்கான கொடுப்பனவுகளும் முறையாக வழங்கப்படுவதில்லை. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி ஆசிரியர் நியமனங்களுக்குள் அவர்களை உள்வாங்வேண்டும் வேண்டும்.
மேலும் நட்டமடையும் பெருந்தோட்ட நிறுவனங்களை இனங்கண்டு, அந்நிறுவனங்கள் நட்டமடைவதற்கான காரணத்தை அறிந்து அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலணியில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கத்துக்கு நன்றி செலுத்த வேண்டும். எனினும் இதுதொடர்பானக் கலந்துரையாடல்களில், பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதிகள் இணைத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது கவலையளிக்கிறது.
மேலும் இந்தக் கலந்துரையாடலின்போது, நட்டமடையும் பெருந்தோட்டங்களை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பிலும் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது. இந்நாட்டில் பெருந்தோட்டத்துறையில் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். 150வருடங்களுக்கு மேலாக பெருந்தோட்டத்துறையில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM