அரச நிறுவனங்களில் புதன்கிழமை இடம்பெறும் மக்கள் சந்திப்பினை திங்கட்கிழமைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக மக்களுக்கு இலகுவான வகையில் மாற்றும் முகமாக வாரத்தின் புதன்கிழமைகளில் 'பொதுமக்கள் தினம்' ஆக பிரகடனப்படுத்தப்பட்டது.
புதன்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வுகள், அமைச்சரவைக் கூட்டங்கள் இடம்பெறுவதால் மக்கள் பிரச்சினைகளை பாராளுமன்றிலோ அல்லது அமைச்சரவையிலோ மக்கள் பிரதிநிதிகளுக்கு வெளிப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே வாரத்தின் திங்கட்கிழமையை “பொதுமக்கள் தினமாக'”பிரகடனப்படுத்தினால் இலகுவாக அமையுமென யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
அதற்கமைய இன்றிலிருந்து திங்கட் கிழமை 'பொதுமக்கள் தினமாக' பிரகடனப்படுத்தவும், அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறித்த தினத்தில் அலுவலகத்தில் கட்டாயமாக இருத்தல் அவசியமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை, பொதுமக்கள் சந்திப்பு, Cabinet
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM