சிறிய ரக டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தானது கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தானது கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் மற்றும் சிறிய ரக டிப்பர் வண்டி நேருக்கு நேராக மோதுண்டதுடன் கொள்கலன் வண்டி ஒன்றினை முந்திச்செல்லும் முயற்சியினால் இவ்விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் டிப்பர் வாகனத்தின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் கல்முனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM